Friday, November 25, 2011

கவியும் கருத்தும்-3

திருவருட்பா : 4091 - அருள் மாலை விளக்கம்
     இராமலிங்க அடிகள்
கோடையிலே இளைப்பாற்றிக் கொள்ளும்வகை கிடைத்த
   குளிர்தருவே தருநிழலே நிழல்கனிந்த கனியே
ஓடையிலே ஊறுகின்ற தீஞ்சுவைத்தண் ணீரே
    உகந்ததண்ணீர் இடைமலர்ந்த சுகந்தமண மலரே
மேடையிலே வீசுகின்ற மெல்லியபூங் காற்றே
     மென்காற்றில் விளைசுகமே சுகத்திலுறும் பயனே
ஆடையிலே எனைமணந்த மணவாளா பொதுவில்
      ஆடுகின்ற அரசேஎன் அலங்கல்அணிந்  தருளே


பொருள்:        
        "வெயில் காலத்தில் இளைப்பாறுவதற்குத் தகுந்த குளிர்ந்த மரம் பான்றவனே! அம்மரம் தருகின்ற குளிர்ந்த நிழல் போன்றவனே! அம்மரத்தில் அந்நிழலில் கனிந்த கனி போன்றவனே! அம்மரம் அமைந்த சூழலினூடனே ஓடும் நீரோடையில் சுரக்கும் இன்சுவை பொருந்திய தண்ணீர் போன்றவனே! அத்தண்ணீரில் மலர்ந்திருக்கும் நறுமணம் கமழும் அழகிய மலர் போன்றவனே! ஓடையருகே உள்ளே மேடையிலே வீசும் மென்மையான பூங்காறைப் போன்றவனே! அந்த மென்காற்றினால் உடலில் உண்டாகும் சுகம் போன்றவனே! அச்சுகத்தின் பயனாகியவனே! நீ அம்பலத்தே ஆடும்போதே என் உள்ளத்தில் முடிகொண்டவனே! என் சொல்மாலையை ஏற்று அருளுக".

No comments:

Post a Comment