Sunday, December 26, 2010

தத்துவம்

 செடிக்கு நாம் தண்ணீர் ஊற்றி வளர்ப்பது
  குழந்தைக்குக் கொடுக்கும் புட்டிப்பாலுக்குச் சமம்

 மழை பெய்து, செடி தானாக வளர்வது
 குழந்தைக்குக் கொடுக்கும் தாய்ப்பாலுக்குச் சமம்

விடுகதைகள் 3

1.சின்ன மச்சான் குனிய வச்சான்

2.அள்ள முடியும் ஆனால் கிள்ள முடியாது

3.சலசலப்பான் சந்தைக்குப் போனான்

4.கோணகோண புளியாங்காய் கொங்கு நாட்டு புளியாங்காய்
வெளியூருக்கு போய் திரும்ப நம்ப ஊருக்கு வரும்

5.ஒட்டுத் திண்ணையில் பட்டுப் புடவை காயுது

விடைகள்
1.முள்
2.தண்ணீர்
3.காஞ்சமிளகாய்
4.சாலை
5.மூக்குத்தி

Sunday, December 5, 2010

விடுகதைகள் - 2

1.
கண்டு பூபூக்கும்
காணாமல் காய் காய்க்கும்


2.
பச்சைப் பெட்டிக்குள்
வெள்ளை முத்துகள்


3.
பாக் பாக் என்குது ஒரு குருவி
பாதாளம் போகுது ஒரு குருவி
செடியில் பூருது ஒரு குருவி
செடியைச் சுற்றுது ஒரு குருவி


4.
தங்கை விளக்கு காட்ட
அண்ணன் மத்தளம் கொட்ட
அம்மா தண்ணீர் தெளிக்கிறாள்


5.
சிற்றெறும்பு வாயைவிடச் சின்ன ஜீவன் எது?

6.
ஆற்று மணலை அள்ளித் தின்றேன்
புற்று மண்ணை பிட்டுத் தின்றேன்
ஓணான் தண்டை உடைத்துத் தின்றேன

கருங்கல்லைக் கடித்துத் தின்றேன்

விடை

1.மணிலா
2.வெண்டைக்காய்
3.தவளை,  நண்டு, பாம்பு, ஆடு
4. மின்னல், இடி, மழை
5.கோழிப்பேன்
6.சர்க்கரை, வெல்லம், கரும்பு, கற்கண்டு

Saturday, December 4, 2010

விடுகதைகள்

1.
வெட்ட வெட்ட பள்ளத்துல விதைநட்டு
வீராப்பு மலையில கொடியேற்றி
தஞ்சாவூர் மலையில காய்காய்த்துத்
தானா பழுத்தபழம் என்ன பழம்?


2.
மை மேல ஏறி
லை பறிக்க போற பெண்ணே
லை வருது கடிக்க
பை மேல ஏறிக்கோ


3.
டாங்கு டீங்கு மரம்
டண்டாங்கி வேல மரம்
வருத்தா கசக்கும்
வாயில போட்டா இனிக்கும்


4.
கொல்லையோ வெள்ளை கொல்லை
விதையோ கருப்பு விதை
கண்ணால பொறுக்கி
கையால விதைத்து
வாயால அளக்கணும்


5.
அடி காட்டில்
நடு மாட்டில்
முனை வீட்டில்


விடைகள்:

1. மழை.
2. எருமை மேல ஏறி
    இலை பறிக்க போற பெண்ணே!
   முதலை வருது கடிக்க
   இலுப்பை மேல ஏறிக்கோ.

3.இலுப்பைப்பூ.
4. எழுதுதல், படித்தல் - தாள், மை.
5. நெற்கதிர்.